மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே! - சந்திரபாபு நாயுடு - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் தெலுங்கு தேசம் கட்சி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பு போட்டியிட்டது.இதனிடையே, சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரவு கொடுத்துள்ளதால் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு:

இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்ததாவது,"மத்திய அரசுகள் பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துள்ள பல்வேறு முடிவுகளில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது.

இன்று ஆந்திர பிரதேசம் என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும். இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே.

அமைப்பு (organisational) வலிமையைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் நாட்டின் வலிமையான கட்சிகளில் ஒன்றாகும்.கடந்த 43 வருடங்களாக தெலுங்குதேசம் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த கட்சி அவ்வளவுதான் (அழிந்து விட்டது) என ஏராளமானோர் தெரிவித்தனர்.

ஆனால், தெலுங்குதேசம் கட்சியின் கொடி எப்போதும் உயரே பறந்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

only party that has made an impact on peoples lives is Telugu Desam Party Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->