ஓ பன்னீர்செல்வத்தின் செயலால் அதிர்ச்சியில் சசிகலா.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் சசிகலா விவகாரம் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே தேனி மாவட்ட அதிமுகவில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா, சசிகலாவை சந்தித்து பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகளவிற்கு ஆதரவாக தீர்மானம் விறைவேற்றி அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட  வேண்டுமென்றால், தமிழ்நாட்டை அனுமதி பெற்று தான் தொடங்க முடியும். கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. 

இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக  மகளிர் தின நல்வாழ்த்துக்கள். அப்போது செய்தியாளர் சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். உடனே ஓ பன்னீர்செல்வம் ஐயோ சாமி என்று கூறியபடியே பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

சசிகளவிற்கு ஆதரவாக ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு எதிராக எடப்பாடிபழனிசாமி திரும்பி உள்ளது. ஆகையால், ஓ.பி.எஸ் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தன செய்தியாளர் சந்திப்பில் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

O PANNEERSELVAM PRESS MEET ABOUT KERALA ISSUE


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->