அதிமுகவில் ஓயாத புயல்.. மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை.!
o panneerselvam meet for chennai
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமையில் விவகாரம் பூதாகரமாக வெடித்து விடுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே, இபிஎஸ் சேலம் புறப்பட்டு சென்று அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் சேலம் புறப்பட்டு சென்ற நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மீண்டும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தம்பிதுரை, வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.
English Summary
o panneerselvam meet for chennai