வெளியானது நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பாடல்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துக் களம் காண இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்துக்கான பிரச்சாரப் பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி (மைக்) சின்னம், அரசியல் மாற்றம், மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி உள்ளிட்ட வாசகங்களுடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வர இசையுடன் ‘நம்ம சின்னம் ஒலிவாங்கி, சீமான் சின்னம் ஒலிவாங்கி’ என்று தொடங்கும் இந்தப் பரப்புரைப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஸ்டீபன்ராஜ் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் கீ.இர்பான் எழுதிய இந்த வரிகளை பாடகர் குரு அய்யாதுரை பாடியுள்ளார். வீரத் தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கை முருகேசன், இதை உருவாக்கியுள்ளார்.

இதையடுத்து தேர்தல் பரப்புரைக்காக புதிதாக வெளியிடப்பட்ட ஒலி வாங்கி சின்னத்தின் பாடலை பிரச்சார வாகனங்களிலும் ஒலிபரப்புவதுடன், சமூக வலைதளங்களிலும் பரப்புமாறு கட்சியின் தலைமையகம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk election campaighn song released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->