முதல் நாளிலேயே.. வேட்பு மனு தாக்கல் செய்யும் நா.த.க.. எந்த தொகுதிகள் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட தயாராக உள்ளன. 

ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளையும் முந்திக்கொண்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 4 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறது. 

அதன்படி ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு‌ தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் மாற்று சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK candidates submit nomination today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->