தாத்தா.. அப்பா செய்த செயலால், சிக்கிய உதயநிதி.! கட்டம் கட்டிய ஆணையம்.!!
national sc st commission notice to udhayanidhi
முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுகவும், பாஜகவும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் இருக்கிறது.
உரிய நேரத்தில் ஆவணங்களை வெளியிடுவதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான புகாரில், உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நேரில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வருகிறார் 19ஆம் தேதி, உதயநிதியிடம் விசாரணை நடத்த உள்ளார்.
English Summary
national sc st commission notice to udhayanidhi