மார்ச் 15ல் "நரேந்திர மோடி" மீண்டும் தமிழகம் வருகிறார்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக‌ மீண்டும் தமிழகம் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி வரும் மார்ச் 15ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

அதனை முடித்துக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 

பிறகு 18 ஆம் தேதி கோவை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டெல்லி செல்ல உள்ளார். 

கடந்த ஒரு மாத காலகட்டத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தமிழகம் வருகிறார்.

நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக திமுக குற்றம் சாட்டை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi again visit to Tamilnadu on March15


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->