சிதம்பரம் கைதிற்கு பின்னால் அரசியல்.! கண்டனம் தெரிவிக்கும் முதல்வர்.!
narayanasamy speech in protest
பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், தலைமை தபால் நிலையம் அருகே, பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. இது கண்டனத்திற்குரியது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைதானது அரசியல் ஆதாயத்திற்காக தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
narayanasamy speech in protest