திடீர் திருப்பம்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே நாங்கள் தான்.. பாஜக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி.!!
nainar nagendran press meet about edappadi palanisamy cm post
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும்.
தலைவர்களின் மறைவிற்கு பிறகு ஏற்படும் இடைவெளியில் அதிமுகவில் சிறிது சிறிது பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான். பின்னர் அது சரியாகிவிடும். அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான். தொடர்ந்து எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளோம். எனவே அதிமுகவுடன் கூட்டணி தொடரும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுபோல இல்லாத நிலையில், அக்னி பாத் திட்டத்தை இளைஞர்களுக்கு நல்ல வழி வகுக்கும்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால், இப்போது பாஜக போராட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
nainar nagendran press meet about edappadi palanisamy cm post