ஜனநாயகத்தை வலுப்படுத்த நீங்கள் உங்கள் வாக்குகளை கட்டாயம் செலுத்துங்கள்.! பிரதமர் மோடி வேண்டுகோள்.!!
modi told about voting youngster in twitter about twit
இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காலை முதலே பொதுமக்கள்., அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என்று பெரும்பாலானோர் தங்களின் வாக்குகளை செலுத்த மிகுந்த ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி வாக்குகளை செலுத்தும் மக்களுக்காக தெரிவித்தாவது., இந்த இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகளவில் இளைஞர்கள் வாக்களிக்கிறார்கள்., அவர்களின் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.
English Summary
modi told about voting youngster in twitter about twit