ஆளுங்கட்சி எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் அரசியல் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவசேனா கட்சியை சார்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏ ரமேஷ் லத்கே மாரடைப்பால் காலமானார். 

ரமேஷ் லத்கேக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் ஷெட்டியை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இதன்பிறகு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான எம் பட்டேல் என்பவரை விழுத்தி எம்எல்ஏவாக தேர்வானார். இந்நிலையில், நேற்று இரவு ரமேஷ் லத்கே திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு சிவசேனா கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA Ramesh Latke Passed away


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->