தொண்டர்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
தொண்டர்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடந்த வழக்கில் தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உயர்நிதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியவை,
பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும்.
அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல் என்று கூறியுள்ளார்.