தமிழகத்தில் அடுத்த 30 ஆண்டுகள் ஸ்டாலின் தான் முதல்வர்-நடிகை ரோஜா.!
Mk Stalin lead 30 years cm in tamilnadu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தில் நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தமிழ் பாடப் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து தமிழக முதல்வரும் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். ஸ்டாலினின் இந்த உடனடி நடவடிக்கையால் அவரை மின்னலை விட வேகமானவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் திமுக இளைஞரணி சார்பாக புரசைவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா, அமைச்சர் பிகே சேகர்பாபு, நடிகர் மயில்சாமி, எம்எஸ் பாஸ்கர், திரைப்பட இயக்குனர் சுசி கணேசன், திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி, ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகை ரோஜா எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றால், மாமியார் வீடு தமிழ் நாடு என்றுதான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அண்ணன் தம்பி உறவு போல நினைத்து மேடையை அலங்கரித்தார். மேலும், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவர் மக்களுக்கு செய்யும் இந்த நலத் திட்டங்களால் இன்னும் 30 ஆண்டுகள் அவர் நிச்சயமாக தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
English Summary
Mk Stalin lead 30 years cm in tamilnadu