தொடங்கியது ஆலோசனை கூட்டம்.! வெளியாகிறதா முக அழகிரியின் புதுக்கட்சி அறிவிப்பு.?! - Seithipunal
Seithipunal


வருகின்ற 3ஆம் தேதி (இன்று) மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எனது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நான் முடிவு எடுப்பேன்." என்று கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி தெரிவித்து இருந்தார்.

இது குறித்து முக அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனைக் கூட்டம் 3 -1 -2021 (இன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில், மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும்." என்று முக அழகிரி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆதரவாளர்களுடன் சற்று நேரத்தில் மு.க.அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். அழகிரி வீட்டில் இருந்து மண்டபம் வரை வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்கள் பதாகைகளில் கருணாநிதி,மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பிய நிலையில் 500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி குறித்து முக அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK ALAGIRI MEET START


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->