ம.ஜ.,கட்சியின் துணைச் செயலாளர் தலையை வெட்டி எடுத்துச்சென்ற கொடூரம்.! இருவர் கைது.! வெளியான சிசிடிவி காட்சிகள்.!
MJK MEMBER MURDER CASE
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வணியம்பாடியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளராக இருந்து வந்தவர். வசீம் அக்ரம் கட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வசீம் அக்ரம் இன்று இரவு 7 மணி அளவில் வாணியம்பாடி அருகே தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே வசீம் அக்ரம்-யை வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் வாணியம்பாடியில் பதற்றம் அதிகமாகியது. இதன் காரணமாக பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தக்கொலை சம்மந்தமாக இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.