சபரிமலையில் முன்னாள் அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தரிசனம் செய்ய பலரும் சென்று வருகின்றனர். தென்னிந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் சபரிமலைக்கு வந்து வழிபட்டு விட்டு செல்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் சபரிமலையில் வழிபாட்டிற்காக அதிகப்படியான கூட்டம் கூடியது. எனவே, வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சபரிமலை நிர்வாகத்தினர் கருத்தில் கொண்டு முதியவர்கள் சிறுவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டு இருக்கின்றனர். 

அன்றாடம் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் மட்டும் தான் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து பல முக்கிய பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் சபரிமலைக்கு சென்று தரிசித்து வருகின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார். இன்று முன்னாள் அதிமுக அமைச்சரான உதயகுமார் தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்துள்ளார். அவருடன் இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister udhayakumar photo viral in sabarimalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->