தன் மகன் திருமண சர்ச்சை குறித்து.. திமுக அமைச்சர் விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பி.மூர்த்தி இருக்கின்றார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கின்றார்.

சமீபத்தில் இவரது மகன் திருமண விழா நடைபெற்றது. இந்த விழா மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. பாண்டி கோயில் இருக்கும் மைதானத்தில் மாநாடு போல இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு பந்தல் போடப்பட்டு மிகவும் விமரிசையாக நடந்தது. ​

இந்த திருமணமானது கருப்பு பணத்தை மறைக்கும், முயற்சி என்றும் இது பொது மக்களுக்கு இடையூறாக வகையில் இந்த திருமணம் நடைபெற்றது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இத்தகைய நிலையில், இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி, "என்னுடைய மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்து  இருக்கின்றேன். அனைவரையும் ஒன்றாக சமமாக உட்கார செய்து ஒன்றரை கோடி செலவில் உணவு கொடுத்து இருக்கின்றேன்" என்று தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister p moorthi about his son marriage gossips 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->