அதிமுக கூட்டணியில் திடீர் விரிசல்? தமிழகத்திற்கு அவர் என்ன செய்தார்? மாறி மாறி விமர்சிக்கும் கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


சில நாட்கள் முன்பு அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் கூறி வருகிறேன் என கூறினார். 

இந்நிலையில் இன்று இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியால் தமிழக அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து வருகிறார். 

நல்லாட்சி நடப்பதாக தமிழக அரசைப் பாராட்டி மத்திய அரசு விருது வாங்கியதை பொன். ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா?எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு பொன். ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister jayakumar says pon radhakrishnan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->