டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்.! விரைவில் கைது.!!
minister jayakumar press meet about tnpsc
சிங்காரவேலரின் 161-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ் அகியோருக்கு தொடர்புள்ளது என கூறினார்.
2006 - 2011 டிஎன்பிஎஸ்சி மோட்டார் ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது திமுகவின் முறைகேடுகள் வெளிவரும் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
English Summary
minister jayakumar press meet about tnpsc