மேட்டுப்பாளையம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பாடாய்பட்ட முகமூடிக் கொள்ளையன்.!  - Seithipunal
Seithipunal


கோவை, மருதூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மருதூர் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை இந்த ஏடிஎம் இயந்திரம் மையத்துக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், முகமூடி கொள்ளையன் சுமார் 5 நிமிடம் அந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து இருக்கிறார்.

பல ஆயுதங்களைக் கொண்டு அந்த எந்திரத்தை அவர் உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. 

இதற்கிடையே சாலையில் அதிக வாகனங்கள் வருவதை பார்த்து, அந்த முகமூடிக் கொள்ளையன் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளான்.

முகமூடிக் கொள்ளையன் தப்பி ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கை பற்றியும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் முகமூடி அணிந்த அந்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettupalaiyam ATM robbery attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->