வேதனையா இருக்கு! நாங்க அப்பவே எம்பி சீட் கேட்டோம் - புலம்பி தள்ளிய துரை வைகோ!
MDMK Durai vaiko DMK MK Stalin MP seat issue
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "1978-ம் ஆண்டு 34-வது வயதில் பாராளுமன்றத்தில் முதன்முறையாக இடம்பெற்ற வைகோ, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அவைகளிலும் சுமுகமாக செயல்பட்டவர்.
நதிநீர் இணைப்பு குறித்து தனிநபர் மசோதா கொண்டுவந்து முன்னோடியானார். வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை (மே 1), என்.எல்.சி தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, ரெயில்வே டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, அம்பேத்கர் படத்திற்கான ஆதரவு, ஈழத் தமிழர் உரிமைக்குரல் என பல்வேறு முக்கிய விஷயங்களில் அவர் தாக்கம் செலுத்தினார்.
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு வழியில் தொடங்கி, இப்போது 81-வது வயதிலும் அதே உறுதியுடன் குரல் கொடுத்துள்ளார்.மூன்று முறை மத்திய அமைச்சர் பதவி வந்த போதும் நிராகரித்தவர்.
அவருக்கு மாநிலங்களவை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேதனை உள்ளது. “பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடமே” என்று வைகோவை பாராளுமன்ற புலியாக அவர் புகழ்ந்தார்.
நாங்கள் தேர்தல் காலத்தில் மாநிலங்களவை பதவிக்கான கோரிக்கையைத் தெரிவித்தோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் தொடர்வோம். சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவதை அவர் மற்றும் கட்சி முடிவு செய்யும்.
ஜூன் 22-ல் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் குறித்து பல விவாதங்கள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
MDMK Durai vaiko DMK MK Stalin MP seat issue