இலங்கையின் புதிய பிரதமர் இவர்தான்.? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, இலங்கையில் போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, இலங்கையில் இரண்டு நாட்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். அடுத்த இரண்டு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தப்பட்டால், நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் எனக்கூறினார். 

இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறிய போது, இலங்கையில் ராஜபக்சக்கள் இல்லாத இளம் அமைச்சரவை நியமிப்பேன் என அறிவித்துள்ளார். இந்த வாரத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில், இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

may be srilanka new pm for ranil wickremesinghe


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->