சட்டப்பேரவையில் வார்த்தை விட்ட மரியம் வில்சன்! விஜய் அதிர்ச்சி? விஜய்யிடம் பறந்த தகவல்.. அடுத்து நடந்தது? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரியம் வில்சன் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்ததாக கூறப்படும் அதிரடி கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனது கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக அவர் பேசியதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னணியில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய மரியம் வில்சன், முந்தைய திமுக ஆட்சியின்போது தனது கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியைப் பெற பணம் செலுத்த வேண்டியிருந்ததாக பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், “நான் கொடுத்ததற்கு நானே சாட்சி” என்று குறிப்பிட்ட அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு இடத்தில் கல்வி நிறுவன அனுமதிக்காக பணம் செலுத்தியதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டாலும் அல்லது அவதூறு வழக்கு தொடரப்பட்டாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சரின் இந்தப் பேச்சு சட்டப்பேரவையில் இருந்த முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒருவர் மற்றொருவரைப் பார்த்துக்கொண்டும், தலையை அசைத்தும், இது என்ன மாதிரியான பேச்சு என்பது போல சைகைகளில் பேசிக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்த பிறகு, இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய்யிடம் நேரடியாகப் பேச அதிகாரிகள் முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியிடம் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“இப்படிப் பேசுவது அரசுக்கே சிக்கலை உருவாக்கும். லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றம்தானே? அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டால், அது அமைச்சரைத் தாண்டி முதல்வருக்கும் அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்” என அதிகாரிகள் தங்களது கவலையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்பியதாகவும், ஆனால் நேரடியாக சந்திக்க முடியாததால் தனிச்செயலாளரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஜெகதீஷ் பழனிச்சாமிக்கு முதல்வர் விஜய்யிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்த விவரங்களை அவர் முதல்வரிடம் எடுத்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய், அமைச்சரிடம் உரிய முறையில் கண்டிப்பை தெரிவிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மரியம் வில்சனை தொடர்புகொண்ட ஜெகதீஷ் பழனிச்சாமி, சட்டப்பேரவையில் அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து கடுமையாக எச்சரித்ததாகவும், இனிமேல் இதுபோன்ற கருத்துகளை பொறுப்பின்றி வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த மரியம் வில்சன், பின்னர் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அமைச்சரின் பேச்சு தொடர்பான இந்தப் பின்னணி தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், சட்டப்பேரவையில் அவர் உண்மையில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அதன் முழுமையான சூழல் குறித்த விவரங்களே இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் அடுத்தகட்டத்தில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mariam Wilson remarks in the Legislative Assembly Was Vijay shocked News reached Vijay What happened next


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->