பாஜக ஜீரோ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் - மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பது குறித்து மற்றும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு மேற்குவங்க மாநில செயலகம் நபன்னா வளாகத்தில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது, இன்றைய ஆலோசனை மிகவும் சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பேசி வியூகம் அமைக்க வேண்டும். 

அதற்கு முதலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், பாஜக ஜீரோ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். தற்போது ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் பாஜக ஒரு பெரிய ஹீரோவாக உருவாகி இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் காங்கிரஸின் ஈடுபாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் அனைத்து கட்சிகளும் கூட்டணி வகுப்பதில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamtha press meet after nithish Kumar meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->