ஆவேசம்! ஓட்டு வங்கிக்காக தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார்...! - அமித்ஷா - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான 'அமித் ஷா' மேற்கு வங்கம் வந்துள்ளார்.

மேலும், நேற்று கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்ததாவது,"அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும்.முதல் மந்திரி மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே நமது ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இதன்மூலம் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரியரை அவர் அவமதித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட மேற்கு வங்க தாய்மார்கள் மற்றும் சகோதரியர் தயாராகி விட்டனர். 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார். தன் ஓட்டு வங்கிக்காக, அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார்" எனத் தெரிவித்தார்.

மேலும் மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee has crossed even the lowest positions for vote bank Amit Shah


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->