வெளியான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: கடுமையாக சாடிய காங்கிரஸ்.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர், மத்திய மந்திரிகள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். எம்.எஸ்.பியை உயர்த்தி சட்டபூர்வ உத்தரவாதம் தருவதாகவும் தெரிவித்திருந்தார். 

அவர் தனது ஆட்சி காலத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் செய்யவில்லை. இளைஞர்கள் வேலை தேடுகின்றனர். 

பண வீக்கம் அதிகரித்து வருகிறது. அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பத்து ஆண்டுகளில் இந்த மனிதரால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. 

அவரது தேர்தல் அறிக்கையை நம்புவது சரியல்ல. மக்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் எதுவுமே கிடையாது என்பதை இது நிரூபித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mallikarjun Kharge condemn bjp election manifesto


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->