அஇஅதிமுகவின் மாநில பொறுப்பாளர் நீக்கம்.! ஓபிஎஸ்., இபிஎஸ்., கூட்டாக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
maharashtra aiadmk administer change
மகாராஷ்டிர மாநில அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பொறுப்பில் இருந்தவரை நீக்கி, அவருக்கு புதிய பொறுப்பை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வழங்கியுள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
"மகாராஷ்டிர மாநிலம், மகாராஷ்டிர மாநிலக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R. கணேசன் அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
மகாராஷ்டிர மாநிலக் கழகச் செயலாளர் பொறுப்பில் திரு. R. கணேசன் அவர்கள் (வாலாவாடி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்." என்று அந்த அறிவிப்பில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
English Summary
maharashtra aiadmk administer change