பெரும் பதற்றம்., பாஜகவினர் மீது விசிகவினர் கொலைவெறி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தக் கூடாது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், பாஜகவினர் மீது கல்வீசி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர் குறித்த பெருமைகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாஜகவை சேர்ந்த புறநகர் மாவட்ட செயலாளர் சுசீந்திரன் தனது தொண்டர்களுடன் அந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தார்.

அப்போது அங்கு காத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்., பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து., அவர்கள் மீது கல்வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தில் அராஜக முறையில் நடந்து கொண்டனர். இதனால் மதுரை மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI VCK MEMBERS ATTACK BJP MEMBERS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->