மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா? சுதீஷ் பரபரப்பு பேட்டி.!
lk sudhish press meet in chennai airport
தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக, தேமுதிக, பாமக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் கூறியவை, தேமுதிக தலைவரின் ஆணைப்படி, நேற்று இரவு நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், நானும் கலந்து கொண்டோம்.
இந்த கூட்டம் இரவு 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு முடிவடைந்தது. பாஜக கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடுங்கும் நிலை ஏற்பட்டால், கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.
செய்தியாளர் ஒருவர் தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுமா? என்ற கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுதீஷ், இது குறித்து விவாதிக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்கள் கட்சி தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைத்து முடிவெடுப்போம்.
22 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி உட்பட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, மோடி ஆட்சியில் இடம்பெறுவோம் என்று கூறினார்.
English Summary
lk sudhish press meet in chennai airport