ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் - முன்னாள் முதல்வர் போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

குறிப்பாக பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மீது பல்வேறு மாநிலங்களில் புகார் எழுந்து வந்தது.

இந்த புகார்களின் அடிப்படையில், நாடு முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை இணைந்து சோதனை நடத்தியது.

சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை போலவே, ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இதே கோரிக்கையை தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lalu prasad yadav say ban RSS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->