நேற்று ஒரு திமுக எம்.எல்.ஏ காலமான நிலையில்.! இன்று மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ காலமானார்.! அதிர்ச்சியிலும் மிகுந்த சோகத்திலும் திமுகவினர்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் இருக்கும், குடியாத்தம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வாக காத்தவராயன் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 2019 இல் நடைபெற்ற 18 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தன்னுடைய சகோதரரின் குடும்பத்தினருடன் அவர் வசித்து வருகின்றார். 

இந்நிலையில், அவர் இருதய நோய்கள் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். சில காரணங்களால் அவருக்கு குணமடையாமல் போக கடந்த மாதத்தில் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காத்தவராயன் உடல்நலனை குறித்து அறிய மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து திரும்பினார். 

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் கூட அவரது உடல்நிலை சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் குடும்பத்தினரை அழைத்து மருத்துவர்கள் தகவலை தெரிவிக்க, இதனை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்த தகவல் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. அவர் மீண்டும் காத்தவராயனை சென்று பார்த்துவிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டு வந்தார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த காத்தவராயன் இன்று காலை காலமானார். நேற்று காலையில் திமுக எம்எல்ஏ வான கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில் இன்று ஒரு எம்எல்ஏ உயிரிழந்து இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kuidyatham dmk mla kathavarayan passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->