தமிழக காவல்துறையால் வேதனையில் கேஎஸ் அழகிரி - முக்கிய புள்ளி கைது!
KS Alagiri Say about manikandan arrest
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
இதற்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அவரின் அந்த கண்டன அறிக்கையில், "திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.மணிகண்டனை, பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போது காவல்துறை அவரை ஏன் கைது செய்தது என்று தெரியவில்லை. இத்தகைய கைது நடவடிக்கைகள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும்.
இந்த கைது நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது. எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டுள்ள திரு. மணிகண்டன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் " என்று கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
KS Alagiri Say about manikandan arrest