கோவையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.! சிக்கியது என்ன? - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தன கட்டைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ 1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI GOVT OFFICE ANTI CORREPTION RAID


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->