திமுகவில் புகுந்து விளையாட தயாரான கனிமொழி..! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
kanimozhi action on dmk
தூத்துக்குடி தொகுதி எம்பியான திமுக கனிமொழி கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக செயல்பட போகிறேன் என தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தமிழகத்தில் சரிவர பணிகள் நடக்காமல் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, "உள்ளாட்சித் தேர்தல் நடைபெற காரணமே திமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தம் தான். திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றது.
கட்சியில் முடிவு எடுக்க வேண்டும் என்றால் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன்." என தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் திமுக பொதுக் கூட்டத்தில் கட்சி முன்னேற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தற்பொழுது கனிமொழி கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக செயல் படுவேன் என கூறியுள்ளார்.