காஞ்சிபுரம்: கள்ளக்காதலால் வியாபாரி கொலை – இளைஞர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


அக்காவில் கள்ளக்காதலரை கொலைசெய்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரன் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஷீலாவுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் கள்ளதொடர்ப்பு இருந்துள்ளது.

வரதனுக்கு இந்த விஷயம் தெரியவந்த நிலையில் அவர் ஷீலாவை கண்டித்துள்ளார். இருந்தும் ஷீலா கனகராஜீடன் பேசி வந்துள்ள நிலையில் கணவன் மனைவியிடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷீலா தனது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஷீலாவின் தம்பி டோரி தனது நண்பனுடன் சேர்ந்து சகோதரியின் கள்ளகாதலனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து டோரியும் அவரது நண்பர் உதயகுமாரும் கனகராஜீடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்த பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை சரமாரியாக குத்தியுள்ளனர். அப்பொழுதும் ஆத்திரம் அடங்காத டோரி அருகில் இருந்த அம்மிகல்லை கனகராஜ் தலையில் போட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் ஓரிக்கை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த டோரி, உதயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Youngster Murder Another Man Due to His Sister Affair Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->