திமுக போட்ட பிச்சை., 6 சீட்டு., திருமாவளனுக்கு தோழமையுடன் சுட்டிய கமல்.!
KAMAL SAY ABOUT VCK
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சியுடனும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது.
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள விசிக-வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி திமிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
நேற்று, திமுகவுடன் விசிக-வுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில் 6 தொகுதிகள் விசிக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விசிக தொண்டர்கள் ஏற்கவில்லை. அவர்களை அண்ணா அறிவாலயத்திலேயே திருமா அதட்டி அடக்கி ஓடிக்கினார்.
இந்நிலையில், விசிக-வுக்கு 6 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
திருமாவளவனின் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேசிய கமல்,
"சமூக நீதியை குத்தகைக்கு எடுத்தவர்கள் தமிழகத்தி பேருக்கு பேசி வருகின்றனர். சமூக நீதியை உங்கள் உயர்வுக்கு 'நாங்கள் போட்ட பிச்சை'தான் (திமுக ஆர்.எஸ்.பாரதி) என்று பேசுகின்றனர்.
சமூக நீதி பிச்சையல்ல, உரிமை. அப்படி சமூக நீதியை பேசிய என் தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதி ஒதுக்கி உள்ளனர். என் தம்பி என்னுடன் வரவேண்டும். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம்." என்று தெரிவித்துள்ளார்.