ஸ்பாட்டிலேயே விழுந்த அமைச்சர்.! அவசர அவசரமாக தூக்கி சென்ற தொண்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் என்பவர் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் இந்த தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது திடீரென அவர் மயங்கியுள்ளார்.

kadambur raju seithipunal

இதனை தொடர்ந்து கட்சியினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து அவரது அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->