#BigBreaking || மலையாளியின் வேலூர் - 'ஜாஸ் ஆலுக்காஸ்' நகை கடையில் கொள்ளை.! சுவரை ஓட்டைபோட்டு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் சுவரை துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஜாய் ஆலுக்கா என்பவரின் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின், வேலூரில் உள்ள கிளை கடையின் சுவரை ஓட்டை போட்டு நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் பின்புறம் சுவரை ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 10 மணி வரை இந்த கடை செயல்பட்டு வந்தது. அதன் பிறகு கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்தபோது, கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தற்போது தான் கடை திறக்கப்பட்டுள்ளதால் நகைகள் எவ்வளவு திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் இரவு முழுவதும் தனியார் நிறுவன காவலர்கள் பணியில் இருந்தபோது இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள், அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jos allukas shop roberry in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->