அடுத்தடுத்த சிக்கலில் சசிகலா.. முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் இல்லத் திருமண விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் என்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். இதை தான் பொதுக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் தற்போது அதிமுகவை நடத்தி வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக தான் கிளை கழக தேர்தல் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு அதிகாரப்பூர்வமாக உள்ளது/ யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள். பொது செயலாளர்கள் பெயரை பயன்படுத்துகிறார் என்பதால் அவர்கள் தலைவராக முடியாது. கட்சிக்கொடி பயன்படுத்துவதால் அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணிகளை அதிமுக செய்து வருகிறது. சசிகலா குறித்து மீடியாக்கள் மட்டுமே பெரிதாக செய்திகளை வெளியிட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet about admk leader


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->