மாமல்லபுரத்தில் சந்திக்கிறாரா மோடி - சீன பிரதமர் ஷி ஜின்-பிங்..?!
india prime minister and china prime minister meets at mamallapuram
தமிழத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்-பிங் இடையிலான உச்சிமாநாடு வருகின்ற மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பேசப்பட்டு வருகிறது.
இருநாட்டு தலைவர்களும் வரும் அக்டோபர் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இந்த மாநாட்டின்போது, இரண்டு தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்திலுள்ள பல இடங்களை பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது.
"இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான முதல் முறைசாரா உச்சிமாநாடு சென்ற ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தபோது, ஹூபே மாகாண அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
india prime minister and china prime minister meets at mamallapuram