அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் ஆகாஷ் மற்றும் ரத்தீஷ் வெளிநாடு தப்பி ஓடியது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி..! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஏன் ஆகாஷ் மற்றும் ரத்தீஷ் ஆகியோர் தப்பியோட வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளதாவது:-

டாஸ்மாக் ஊழலை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில், அதில், அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட துணை முதல்வர் நண்பர்களாக இருக்கக்கூடிய ரத்திஷ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இந்நிலையில், ஆகாஷூம், ரத்திஷூம் லண்டனுக்கு போய்விட்டதாக சொல்கின்றனர். ஒரு சிலர் இங்கேயே இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி, நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், அமலாக்கத்துறைகும் பயப்பட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன், 2011-ஆம் ஆண்டு தேர்தல் நடக்கும்போது மாடியில் ஈடி ரெய்டு நடந்து கொண்டு இருந்தது. கீழே அதன் பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டு இருந்தது. ஆனால், அன்று மட்டும் ஈடிக்கு பயந்துதான் பேச்சு வார்த்தையை முடித்தார்களா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈ.டி. மீது பயம் உள்ளதால் தான் பயப்பட மாட்டோம் என்று உதயநிதி சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் ரத்தீஷ், ஆகாஷ் ஏன் பயந்து வெளிநாட்டுக்கு போக வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If there is no fear of the Enforcement Directorate why did Akash and Ratheesh flee abroad Nainar Nagendran asks


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->