பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேக்கும் ஜெயலலிதா ஆவி?! செல்போனை எடுத்த மக்களுக்கு அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல அரசியல் கட்சிகள் அரசியல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. 

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தனக்கான பிரசார யுக்திகளை தோற்றுவிப்பதை பற்றி தீவிரமாக திட்டமிட்டு வருகின்றது. மேலும், சில கட்சிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தை செய்தும் வருகின்றனர்.

பல கட்சிகளின் முக்கிய தலைவர்களது குரலை பதிவு செய்து அந்த குரல் பதிவை வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்துள்ளனர். இந்நிலையில், அதிமுக சார்பில் பிரசாரம் சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் ஜெயலலிதா இருந்தபோது அவரது குரலை பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். அதே போல் ஜெயலலிதா மறைந்த பின்னரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதை பயன்படுத்தினர். 

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், தானாகவே வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு கால் செய்யப்பட்டு, ஜெயலலிதா குரலில் ஒட்டு கேட்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இது தினம் தினம் பல லட்சக்கணக்கானோருக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் பலர் இந்த ஆடியோவினை கேட்டுவிட்டு, 'இது ஜெயலலிதாவின் ஆவி தான் ஓட்டு கேக்கிறது ' என கூறி பிறரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Jayalalitha sprit asked to vote for admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->