“பைக், கார் தரறேன்னா… நான் என்ன பிக்காலி பயலா?” – விஜயை கடுமையாக தாக்கி பேசிய சீமான்!
If I give you a bike or a car what am I a poor man Seeman harshly attacked Vijay
ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில், தலைவர் சீமான் வழக்கமான தீவிர பேச்சு நடைமுறையில், இந்த முறை நடிகர்-அரசியல்வாதி விஜயை நேரடியாக குறிவைத்து கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் பேசிய சீமான், விஜயின் தேர்தல் வாக்குறுதிகளை நையாண்டி செய்தார். “பைக் தர்றேன், கார் தர்றேன்… நான் என்ன பிக்காலி பயலா? வீட்டுக்கு கார் தர்றேன்னு சொல்லுறாரே விஜய்! பிறகு கேக்கிறவங்க வீட்டுக்கு அம்பேத்கர் போட்டோ அனுப்பி, அதுக்குள்ள கார் இருக்குன்னு சொல்லுவார்!” எனக் கடுமையாக தாக்கினார்.
தனது ஆட்சியில் பசி இல்லாத நாடு, வேலை, மருத்துவம், கல்வி அனைத்தையும் வழங்க முடியும் எனக் கூறிய சீமான், “பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்படும். நான் ஆட்சி அமைப்பேன்; இல்லை என்றாலும் என் தயவு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” என வாக்கு மூலமான சவாலையும் விடுத்தார். செங்கோட்டையன் ராஜினாமா குறித்தும் கருத்து தெரிவித்து, அதனால் அரசியலில் பெரிய தாக்கமில்லை என்றார்.
விஜய் சார்பில் நடைபெறும் பிரச்சாரம் குறித்தும் பேசிய சீமான், கரூரில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை நினைவுபடுத்தி, விஜய் வழங்கிய வீடு, பைக், கார் ஆகிய வாக்குறுதிகளை விமர்சித்தார்.
முன்னதாக காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய், “ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, பைக், எதிர்காலத்தில் கார் கிடைக்க வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்க கல்வி மாற்றம் தேவை; விவசாயிகளை பாதுகாக்க புதிய திட்டம் அவசியம்” எனப் பேசியிருந்தார்.
விஜயின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து சீமான் விட்டுள்ள இந்த கடும் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
English Summary
If I give you a bike or a car what am I a poor man Seeman harshly attacked Vijay