மீன் இல்லை... வலை தான் இருக்கு.. வேணுமா.? சிதம்பரத்தை சீண்டும் எச்.ராஜா.!
h.raja teased chidambaram
எச்.ராஜா அவர்கள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படாத விஷயத்தை கிண்டல் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்வதும், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறையில் தங்கிய நாட்களில் ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி சமீபத்தில் ஜாமீன் மனு கோரியபோது, நீதிபதிகள் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகள் வேண்டுமானால் ஏற்படுத்தி தர இயலும். ஆனால், ஜாமீன் எல்லாம் தர முடியாது என்று நிராகரித்துள்ளனர்.
இதனை கிண்டல் செய்யும் விதமாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது.. அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.” என்று பதிவு செய்துள்ளார்.
English Summary
h.raja teased chidambaram