மீண்டும் உங்கள் பணியை தொடருங்கள்., கிஷோர் கே ஸ்வாமி, மாரிதாஸ்க்கு வாழ்த்து கூறிய முக்கிய புள்ளி.!  - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் மறைந்த கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததாக கிஷோர் கே ஸ்வாமி, ஷிபின், மாரிதாஸ் ஆகியோரை தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், கிஷோர் கே ஸ்வாமி திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி சேர்ந்த ஷிபின்  ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதே சமயத்தில் கிஷோர் கே ஸ்வாமி மீது தமிழக அரசு போட்டிருந்த குண்டர் தடுப்பு சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று ஒரே நாளில் கிஷோர் கே ஸ்வாமி மற்றும் மாரிதாஸ் அடுத்தடுத்து விடுதலையாகி வெளியே வந்தனர். இதனை பாஜக தொண்டர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், "ஷிபின், கிஷோர் கே ஸ்வாமி, மாரிதாஸ் ஆகிய இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்குமான வெற்றி ஆகும்.

அவர்கள் 3 பேரும் அவர்களின் பணியை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H RAJA WISH MARIDOSS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->