ராகுல்காந்தி தண்டனைக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - எச்.ராஜா.! - Seithipunal
Seithipunal


பாஜக ஒன்றிய தலைவரை மகன் திருமணத்திற்கு காங்கேயம் வழியாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்றார். அங்கு அவருக்கு காங்கேயம் நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பட்ஜெட்டில் வெறும் பொய் மட்டுமே இருந்தது. கடந்தாண்டு பேருந்து வாங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இம்முறை அது குறித்து பேசவே இல்லை. மீண்டும் 1000 பேருந்துகள் வாங்குவதாகவும், 500 பேருந்துகளை புதுப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெயருக்கு பட்ஜெட் என மக்களை ஏமாற்றியுள்ளனர். தமிழக மக்களுக்கு இது பயன் இல்லாத பட்ஜெட். பட்ஜெட்டிற்கும் திமுக அரசின் செயல்பாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற விஷயம் குறித்து அவரே விளக்கம் அளிப்பார். கடந்த முறை கூட்டுறவுக்கு 243 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அதன்பின்னர் ராகுல் காந்தி தண்டனை குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி தண்டனைக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்றும் அதன் அடிப்படையிலேயே ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja speech about Rahul Gandhi punishment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->