எஸ்.டி.பி.ஐ இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக படுகொலை - எச் ராஜா டிவிட்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு அரசியல் படுகொலைகள் அரங்கேறியுள்ளது. இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரும், பாஜக கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கே.எஸ். ஷான். இவர் நேற்று இரவு மன்னஞ்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று வரிமாறித்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியினர் குற்றம் சாட்டினர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவில் மாநில செயலாளரும், வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் இன்று காலை அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சீனிவாசன் படுகொலைக்கு எஸ்டிபிஐ கட்சியினர் தான் காரணம் என்று பாஜக தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகர் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், "கேரளா OBC அணி பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன் எஸ்.டி.பி.ஐ இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த பயங்கரவாதச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு எனது வீரவணக்கங்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja say about kerala murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->