திமுக அரசை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஹச் ராஜா! - Seithipunal
Seithipunal


"ஆளுநர் விவகாரத்தில் திமுகவினர் சரியாக நடக்கவில்லை என்றால், அரசை கலைக்க நேரிடும்" என்று, பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹச் ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹச் ராஜா தெரிவித்ததாவது, "தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய உரையில், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் உண்மை நிலவரம் தமிழகத்தில் கஞ்சா பழக்கம், கோவையில் குண்டுவெடிப்பு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்களின் 18 வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீச்சு என இப்படி பல சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தில் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்து உள்ளதாக உண்மைக்கு புறம்பான பல தகவல்களை ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை ஆளுநரை படிக்க சொன்னால் எப்படி படிப்பார்?

தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை அவர் புரிந்து கொண்டதால் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் ஆளுநரை நிறுத்திக் கொண்டால், அவர்களுடைய அரசை காப்பாற்றிக் கொள்ளலாம்"
 என்று ஹச் ராஜா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja Say about DMK Govt RNRavi issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->