இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு முதல்வர் முக ஸ்டாலின் ஒப்புதல்.!!
Govt School Morning Breakfast
மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை சென்னை, அசோக் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.
மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும். மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
English Summary
Govt School Morning Breakfast