இன்னும் நிறைய பேர் அரசியலுக்கு வர வேண்டும் - தமிழிசை சவுந்தர்ராஜன்.!
governor thamizhisai soundarrajan speech about actor vijay
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;- "நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கிறேன்.
இன்னும் அதிகமான பேர் அரசியலுக்கு வர வேண்டும். நான் எந்த கல்லூரிக்குச் சென்று பேசினாலும், படிப்பவர்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதேபோல், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்.
தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எதுவுமில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். இன்னும் நிறைய பேர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
English Summary
governor thamizhisai soundarrajan speech about actor vijay